அவன் எனக்காகப் பிறந்தவன்..
என்னுள் நிறைந்தவன்..
அவன் அன்பில் நான் மயங்கினேன்..
அவன் பிரிவில் நான் கலங்கினேன்..
ஆனால் காதலைச் சொல்லத் தயங்கினேன்..
என் மனசு
அவனைப் பார்க்கும் முன் சொல்லத்துடிக்கும்..
அவனைப் பார்க்கும்போது மெல்ல நடிக்கும்..
ஏனோ சோகம் வந்து வாட்டுகிறது..
இதுதான் காதல் என்று காட்டுகிறது..
அவனை மறக்கவும் முடியவில்லை..
காதலை மறைக்கவும் முடியவில்லை..
என் காதலைச் சொல்வேனா?
என் காதலில் வெல்வேனா?
எனக்கே தெரியவில்லை..
___________
புரியாத பிரியம்
பிரியும் போது புரியும்...
இதில் இருப்பது நான் எழுதிய கவிதைகள் மட்டும் அல்ல என் மனதைக் கவர்ந்த வரிகளும் தான்.. இதில் சில வரிகள் மெய்.. சில வரிகள் பொய்.. ஆனால் என்னைக் கவர்ந்தது முற்றிலும் மெய்..
Golden facts of life :-
When someone loves u, u dont realise it.
When u realise it, its too late.
U always love the ones who leaves u and leave the ones who loves u...
எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல...
என் கவிதைகளைத்தான் என்று....
ஆனால் உனக்குத் தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று !!!
- என்னைக் கவர்ந்த வரிகள்..
எழுதியவர் பெயர் தெரியவில்லை..__
நீ என்னை நேசிக்கவே
யோசிக்கிறாய்..
நான் உன்னை நேசிக்கவே
சுவாசிக்கிறேன்...
- பார்த்திபனின் கிறுக்கல்கள்
உன்னை விவாகம் செய்யமுடியாததால்
விவாகரத்து செய்துவிட்டேன்
என் காதலை...
உன் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் உன்னை நேசிப்பது இல்லை..
உன்னை நேசிப்பவர்கள் எல்லோரும் உன் அருகில் இருப்பது இல்லை..
- swami vivekanandar
அவன் எனக்காகப் பிறந்தவன்..
என்னுள் நிறைந்தவன்..
அவன் அன்பில் நான் மயங்கினேன்..
அவன் பிரிவில் நான் கலங்கினேன்..
ஆனால் காதலைச் சொல்லத் தயங்கினேன்..
என் மனசு
அவனைப் பார்க்கும் முன் சொல்லத்துடிக்கும்..
அவனைப் பார்க்கும்போது மெல்ல நடிக்கும்..
ஏனோ சோகம் வந்து வாட்டுகிறது..
இதுதான் காதல் என்று காட்டுகிறது..
அவனை மறக்கவும் முடியவில்லை..
காதலை மறைக்கவும் முடியவில்லை..
என் காதலைச் சொல்வேனா?
என் காதலில் வெல்வேனா?
எனக்கே தெரியவில்லை..
என் காதலைவிட
என் கவிதை வேகமாக செல்கிறது அவனை நோக்கி...